Saturday, May 25, 2013

அரங்க நிகழ்விடங்கள்


நாடகமொன்று நடிக்கப்படும் எந்தவோர் இடத்தையும் அரங்க நிகழ்விடம் எனப்படும்.

களரி, மேடை,வெளி, ஆடுகளம், அரங்கு எனப் பல பெயர்களால் அரங்க நிகழ்விடம் அழைக்கப்படும்.

பண்டைக்காலத்தில் தீக்குவியற் களம், யாகக் களம், பூசைக் களம் என்பன அரங்க நிகழ்விடங்களாக இருந்தன.

கிரேக்க அரங்கு



பண்டைய கிரேக்கர்களின் கலை ரசனைக்கும், கட்டிட கலைக்கும் சான்றாக விளங்குகிறது அக்ரோபாலிஸ் மலைச் சரிவில் அமைந்துள்ள கலை அரங்கம். கிரேக்கத்தின் அன்றைய எஃபிடாரஸ் (மீஜீவீபீணீuக்ஷீஷீs) நகரில் கட்டப்பட்டுள்ள இந்த டூரிங் டாக்கீஸ் சுமார் 2500 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. கிரேக்கர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து வசந்த காலத்தை கொண்டாட நாடக விழாக்களும், போட்டிகளும் நடத்துவது வழக்கம். டையோனிசஸ் (பீவீஷீஸீஹ்sஷீs) என்ற கிரேக்க கடவுளின் நினைவாக நடத்தப்படும் இந்த விழாக்களை ஏராளமானோர் கண்டுகளிக்க வசதியாக மிகப்பிரம்மாண்டமான கலை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் எஃபிடாரஸ் நகரில் உள்ள கலை அரங்கம்.

சுமார் 15 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், அரை வட்ட வடிவில் அமைந்துள்ளது. அக்ரோபாலிஸ் மலை அடிவாரத்தில் பாறைகளை குடைந்து இதனை உருவாக்கியிருப்பதால் நடிகர்களின் குரல்கள் மலையில் மோதி எதிரொலிக்கின்றன. இதனால் எந்த மைக் வசதியும் இல்லாமலேயே கடைசி வரிசை ரசிகர்களும் நாடக உரையாடல்களை கேட்டு மகிழ்ந்தனர். இதற்கு வசதியாக ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்கள் பேசுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டன.

நாடக நடிகர்கள் அரங்கின் நடுவில் உள்ள ‘ஆர்கெஸ்ட்ரா’ என்று அழைக்கப்பட்ட திறந்தவெளிப் பரப்பில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நாடகங்களுக்கு பின்னணி இசையும் இசைக்கப்பட்டன. இவ்வளவு அட்டகாசமாக நடைபெற்ற இந்த நாடகங்களில் இருந்த ஒரே குறை, இவற்றில் பெண்கள் நடிக்க அனுமதிக்கப்படவில்லை. பெண் வேடங்களையும் ஆண் நடிகர்களே ஏற்று நடிப்பார்கள். அவ்வளவு ஏன், இந்த நாடகங்களைப் பார்க்க கூட பெண்களுக்கு அக்கால கிரேக்கத்தில் அனுமதி இல்லை.

பண்டைய கிரேக்கத்தின் இந்த பிரம்மாண்ட கலை அரங்கில், இப்போதும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பெண்களும் பங்கேற்கும் நிறைவான நாடகங்கள்.





No comments:

Post a Comment