Saturday, May 25, 2013

நாடகத்தின் வகைகள்

3.1 நாடகமும் கூத்தும்
உலக நாடகங்களை ஆராய்ச்சி செய்தவர்கள் இருபெரும் பிரிவுகளில் நாடகங்களை அடக்கிக் காட்டுவர். அவை,
1. இன்பியல் நாடகங்கள்
2. துன்பியல் நாடகங்கள்
மகிழ்ச்சியான நிலையில் நாடகம் முடிவுற்றால் இன்பியல் நாடகம் என்றும் துயர முடிவைக் கொண்டிருந்தால் துன்பியல் நாடகம் என்றும் நாடகங்களைப் பிரித்துக் காட்டினர்.
தமிழ் நாடகங்களிலும் பிற இந்திய மொழி நாடகங்களிலும் துன்பியல் முடிவு என்பது விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று அன்று. இந்திய நாடகங்கள் பெரும்பாலும் இன்பியல் முடிவைக் கொண்டவையாகவே இருக்கும். இருபதாம் நூற்றாண்டில் மேனாட்டு நாடகச் செல்வாக்கு இந்தியாவில் ஏற்பட்ட பின்னர்தான் துன்பியல் முடிவுகள் நாடகங்களில் பரவின.
3.1.1 பழைய நாடக வகைகள்
பழைய தமிழ் நாடகங்களும் இருபதாம் நூற்றாண்டு நாடகங்களும் வேறு வகையான பிரிவுகளைக் கொண்டிருந்தன. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் பழந்தமிழ் உரையாசிரியர்கள் பின்வருமாறு வகைப்படுத்தினர். அவை,
1. வேத்தியல்
2. பொதுவியல்
அரசர்களும் அரசர்களை ஒத்த பெரியவர்களும் காணும் நாடக வகை வேத்தியல். பொதுமக்கள் காண்பதற்குரிய நாடக வகை பொதுவியல்.
இந்த நாடகம் அல்லது கூத்து வகைகளை இன்னும் நுட்பமாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பகுத்துக் காட்டுகிறார்.

வசைக் கூத்து - புகழ்க் கூத்து
வரிக் கூத்து - வரிசாந்திக் கூத்து
சாந்திக் கூத்து - விநோதக் கூத்து
ஆரியக் கூத்து - தமிழ்க் கூத்து
இயல்புக் கூத்து - தேசிக்கூத்து
என்பன அடியார்க்கு நல்லார் வகைப்படுத்தும் பத்துக் கூத்து வகைகள்.
3.1.2 இருபதாம் நூற்றாண்டு நாடக வகைகள்
மேடை நாடகமே தம் வாழ்வின் பெரும்பணி என்று செயல்பட்டவர் அவ்வை தி.க. சண்முகம். அவர், மேடை நாடகங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் எனக் கூறுகிறார்.
“தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம், பக்தி இலக்கிய நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி இலக்கிய நாடகம், சமுதாய நாடகம், சமுதாயச் சீர்திருத்த நாடகம், தேசிய நாடகம், நகைச்சுவை நாடகம் என நாடகங்களை இவ்வாறு பலவகைப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு பிரச்சார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.
1. புராண நாடகம்
சிவலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, மகாபாரதம் போன்றவை புராண இதிகாச நாடகங்கள்.
2. வரலாற்று நாடகம்
இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தஞ்சை நாயக்கர் தாழ்வு, இமயத்தில் நாம் போன்றவை வரலாற்று நாடகங்கள்.
3. கற்பனை நாடகம்
இரண்டு நண்பர்கள், லீலாவதி, சுலோசனா, வேதாள உலகம் போன்றவை கற்பனை நாடகங்கள்.
4. பக்தி நாடகம்
நந்தனார், சிறுத்தொண்டர், பிரகலாதன், மார்க்கண்டேயர் போன்றவை பக்தி நாடகங்கள்.
5. சமுதாய நாடகம்
உயிரோவியம், வேலைக்காரி, நாலுவேலி நிலம், டம்பாச்சாரி விலாசம் போன்றவை சமுதாய நாடகங்கள்.
6. சீர்திருத்த நாடகம்
அந்தமான் கைதி, இரத்தக் கண்ணீர், இழந்த காதல், வாழ்வில் இன்பம் போன்றவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.
7. நகைச்சுவை நாடகம்
சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், துப்பறியும் சாம்பு, ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது போன்றவை நகைச்சுவை நாடகங்கள்.
8. பிரச்சார நாடகம்
பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், காகிதப் பூ போன்றவை பிரசார நாடகங்கள்.
3.1.3 இலக்கிய நாடக வகைகள்
மேடையில் நடிக்கப்பெறும் நாடகங்களை வகைப்படுத்துவதைப் போல் இலக்கியமாக எழுதப்பெறும் நாடகங்களை இருவகையில் பிரிக்கலாம். அவை,
1) உரைநடை நாடகங்கள்
2) செய்யுள் நாடகங்கள்
இந்த இருவகை நாடகங்களும் நடிப்பதற்கும் படிப்பதற்குமாக எழுதப்படும் நாடகங்களாகும்.
காட்சி அமைப்பையும் காண்போரையும் மனத்துள் கொள்ளாமல் மொழிநடைக்கும் கருத்துக்கும் மட்டுமே முன்னுரிமை தந்து எழுதப் பெறும் நாடகங்களை அரங்கேற்ற முடியாது. இவற்றைப் படித்து மட்டுமே இன்புறலாம்.
மொழிநடைக்கும் முதன்மை தந்து, காட்சி அமைப்பையும் முன்னிறுத்தி எழுதப்படும் நாடகங்களைக் கண்டு மகிழ்வதுடன் கற்றும் மகிழலாம்.

கூத்தரங்கம் பற்றி பேராசிரியர் மௌனகுருவின் நேர்காணல்

efined
undefined

கூத்தரங்கம்

Posted

வளப்பற்றாக்குறையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமின்மையும் எனக்கான சவால்கள்

In செவ்வி on அக்டோபர்17, 2007 at 5:38 பிற்பகல்
mounakuru.jpg
கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் கூத்தரங்கிற்காக வழங்கிய விசேட செவ்வி இங்கு தரப்படுகிறது.
நேர்கண்டவர் தே.தேவானந்த்
கே: கூத்தரங்கம் சார்பாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களே, நீங்கள் ஈழத்தமிழ் நாடக உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவர். கூத்தரங்கில் அறிமுகமாகி பல்வேறு வகையான நாடக வடிவங்களின் பரிச்சயங்களைப் பெற்று ஒரு மூத்த நாடகவியலாளனாக இருக்கிறீர்கள். உங்களை நாடகத் துறையில் ஈடுபட வைத்தது எது?

ப: சாதாரணமாக நாடகம் நடிப்பதன் மூலம் பிறர் பாராட்டுக்களையும் புகழையும் பெற விரும்பும் நிலைதான் என்னை நாடகத் துறையில் ஈடுபட வைத்தது. 1948ம் ஆண்டு எனது கிராமப் பாடசாலை நாடகம் ஒன்றில் நான் நடித்தபோது எனக்கு மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரம், மதிப்பு, அன்பு, புகழ் என்பனவே ஆரம்ப காலத்தில் என்னை ஈடுபட வைத்திருக்க வேண்டும் என்று இப்போது நினைக்கிறேன்.

கே: உங்கள் நாடகம் பேசும் விடயங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்.

ப: சமூகத்தில் காணப்படும் அநீதி, சமமின்மை, அடக்குமுறை என்பன எல்லாக் கலைஞர்களையும் போல் என்னையும் பாதித்துள்ளது. இவ்வகையில் அடக்கு முறைக்கு எதிரான விடயங்களையும், நெருக்கடி நிலையில் மனித உணர்வுகளையும், உறவுகளையும் என் நாடகங்கள் பேசுகின்றன என்று நான் நினைக்கிறேன்.

கே: கூத்தரங்கிலும், நவீன அரங்கிலும் செயற்படும் போது நீங்கள் சாதித்தவைகள் எவை? உங்களுக்குச் சோதனையாக, சவாலாக இருந்தவைகள் எவை?

ப: கூத்தரங்கு, நவீன அரங்கு என, என் அரங்கச் செயற்பாட்டை நீங்கள் பிரித்துக் காட்டுகீர்கள். எனக்கு அப்படி ஒரு பிரிவு தெரிவதில்லை. அரங்கு என்பது அரங்குதான். எல்லா அரங்குகளும் சிற்சில வேறுபாடுகளுடன் அடிப்படை அரங்கப் பண்புகளைப் பெற்றிருக்கும். ‘மனிதரை மனிதர்க்குக் காட்டுவது, அல்லது உணர்த்துவது அரங்கு’.

சாதனை என்று கூறுமளவிற்குத் துணிவில்லை. ஆயினும், நான் படைத்த நாடகங்களுள் தாங்கள் கூறியதற்குத்தக கூத்தரங்கி;ல் ‘இராவணேசனையும்’(2000, 2003) நவீன அரங்கில் அபத்த நாடகசாயலில் அமைந்த ‘அபசுரத்தையும்’ (1981) குறிப்பிடுவேன்.

எனது பெரும்பாலான நாடகங்கள் பரிசோதனை நாடகங்கள். எல்லாப் பாணிகளையும் அழகுறக்; கலந்து புதிய புதிய வடிவங்களைத்; தோற்றுவிக்க முயலுவேன். இவ்வகையில் ‘சக்தி பிறக்குது’ (1986) ஒரு புது முயற்சி. பெண் விடுதலை கருத்தினை பரதம், தென்மோடி, வடமோடி, கொட்டகைக்கூத்து, காத்தவராயன் பாணி, ஒயிலாக்கற் பாணி என்பனவற்றைக் கலந்து உருவாக்க எடுத்த முயற்சி அது. அதுபற்றி சோ.பத்மநாதன் அழகாக ஒரு விமர்சனம் அன்று யாழ்ப்பாணத்தி;ல் வந்த முரசொலிப் பத்திரிகையில் எழுதியி;ருந்தது ஞாபகம்.

எதிர்கொண்ட சோதனைகளையும் சவால்களையும் கேட்டிருந்தீர்கள். என் நாடகங்களின் காவிகள் இசையும், நடனமும். எனக்குத் திறன் வாய்ந்த பாடகர்களும் இசை வல்லாளர்களும் ஆடல் வல்லார்களும் கிடைக்கவில்லை. ஒரிருவர் இருந்தாலும் அதிக பணம் கேட்பர். ஏதோ இருக்கின்ற மண்ணை வைத்துக் கொண்டுதான் உருவம் செய்ய வேண்டியிருந்தது. எனவே, நினைத்தளவு உச்சங்களைத் தொடமுடியவில்லை. அது ஒரு சோதனை.

ஒரு பாத்திரத்தைப் படைத்துக் காட்டுகின்ற கற்பனா வளம் பொருந்திய நடிகர்கள் நம் மத்தியில் மிகமிகக் குறைவு. அப்படியானவர்களை உருவாக்கும் பயிற்சியும் தரப்படுவதில்லை. நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் உடலுக்குத்தான் அதிக முக்கியத்துவத்தைக் கொடுப்பதை நான் அவதானித்திருக்கின்றேன். உளப் பயிற்சி இல்லாத நடிகன் எவ்வாறு ஆழமான பாத்திரங்களை உருவாக்க முடியும்? இதனால் குணாதிசய மோதல் உள்ள சிறந்த நாடகங்களைத் தயாரிக்கத் தயக்கமாக இருந்தது. இது ஒரு சவால். நினைத்தபடி தமது அபிப்பிராயங்களைக் கருத்துக்களைக் கூறமுடியாத சமூக, அரசியல் சூழல். இது ஒரு சவால்.

ஈழத்து தமிழர் பிரச்சினையின் பல பரிமாணங்களைப் பல வடிவங்களிற் செய்யப்பெரும் ஆவல் இருந்தும் முடியவில்லை. பிழையாக வியாக்கியானங்கள் அவற்றிற்கு தரப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் கூடியளவு தமக்கேற்ப பிழையாக வியாக்கியாணிப்பதையே பண்பாகக்; கொண்டது நமது சமூகம். இதனால், பல செயற்பாடுகளை மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டேன். சுருங்கச் சொன்னால் வளப்பற்றாக்குறையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்pன்மையும் என்னை நோக்கிய சோதனைகள் சவால்கள் என்பேன்.

கே: நீங்கள் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக நாடகத்துறையில் ஈடுபட்டு வருகிறீர்கள். இவ்வாறு தொடர்ச்சியாகச் செயற்பட உங்களை ஊக்குவித்தவைகள் எவை?

ப: ஓம். நீங்கள் சொன்னபடி 1948 இலிருந்து 2003 டிசம்பர் வரை ஏறத்தாழ 55 வருடங்கள் நான் தொடர்ச்சியாக நாடகத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். நாடகத்தில் நான் கொண்ட ஈடுபாடும் அதன் மூலம் நான் பெற்ற உறவுகளும் உலக அனுபவமும்தான் என்னை தொடர்ச்சியாக ஈடுபட வைக்கின்றன.

50களில் இடைநிலைக்கல்வி பயில கிராமத்திலிருந்து 12 மைல் தொலைவி;ல் உள்ள விடுதிவசதி பெற்ற வந்தாறுமுல்லை மத்திய கல்லூரிக்கு வந்த பின்னர் எனது 19வது வயது வரை அங்கு கல்வி கற்பித்த, ஓரளவு நாடகம் தெரிந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அல்வின் தேவசகாயம், கொக்குவில் இரத்தினம் மாஸ்டர், மட்டக்களப்பு கணேசன் மாஸ்டர் ஆகியோருடன் எமது அதிபராக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பி.பி.சவரி முத்துஆ.யு அவர்கள், இவர்கள் ஊக்குவிசைகள். இக்கூத்துத்தான் 1959இல் பேராதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

60களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது எனது 24வது வயது வரை பேராசிரியர்களான வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாசபதி, சரத்சந்திரா போன்றவர்கள் ஊக்குசக்திகள். இக்காலகட்டத்திலேதான் கூத்தின் வீரியத்தையும் கூத்தை நவீன உலகுக்கு எப்படி அளிக்க வேண்டுமென்பதையும் கற்றுக்கொண்டேன்.

70களின் நடுப்பகுதியில் கொழும்புக்குப் பாடவிதான சபையிற் பணியாற்றச் சென்றபின் கொழும்பு நண்பர்களான நா.சுந்தரலிங்கம், அ.தாசிசீயஸ், இ.சிவனாந்தன், இ.முருகையன், சுஹைர் ஹமீட் ஆகியோரின் தொடர்பும் நவீன நாடகப்; பரிச்சயமும் கிட்டுகிறது.

நிறையச் சிங்கள நவீன ஆங்கில நாடகங் களைப் பார்க்க, அவை பற்றிப் படிக்க, பயிற் சிப் பட்டறைகளிற் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், எனது 33வது வயது வரை அவர்களே ஊக்கு சக்தி.

70களின் பிற்பகுதியில் 1976இல் யாழ்ப்பாணம் செல்கிறேன். அங்கு 1992 வரை இருக்கிறேன். எனது 50 வயது வரை முறையே யாழ்ப்பாணத்தில் ஓஸ்மானியாக் கல்லூரி, பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பணியாற்றுகின்றேன். அங்கு அவைக்காற்றுக் கழகத்தை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். (‘அதிமானிடன்’, ‘தலைவர்’ என்பன அதற்காக நான் தயாரித்த நாடகங்கள்) இங்கு நிர்மலா, நித்தியானந்தன், பாலேந்திரா, ஏ.ஜே.கனகரெட்ணா தொடர்பு கிடைக்கிறது.

mounakuru_a.jpgபின்னர், நாடக அரங்க கல்லூரியின் தொடர்பு கிடைக்கிறது. குழந்தை ம.சண்முகலிங்கம் என்ற அற்புதமான உறவு இதன் மூலம் வாய்க்கிறது. அரசையா, ஜெனம், ருத்திரேஸ்வரன், சிதம்பரநாதன், சுந்தரலிங்கம், பேர்மினஸ், கண்ணன் என அது விரிகிறது. யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலங்களில் பாடசாலை நாடகங்களிலும் ஈடுபட்டேன். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, சென்ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, டொன் பொஸ்க்கோ, உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் அதிபர்கள் பிரதான ஊக்குசக்திகள்.
கே: நீங்கள் ஒரு கூத்தாய்வாளன் என்ற வகையில் மட்டக்களப்புக் கூத்தின் இன்றைய நிலை பற்றிக் கூறுங்கள்?

ப: நான் மட்டக்களப்பி;ல் கூத்துக் கலையினை 70களில் பிற்பகுதியில் கள ஆய்வு செய்து அன்றைய நிலையில் என் அபிப்பிராயங்களைக் கூறியிருந்தேன். 20 வருடங்களுக்குப் பின்னர் நிலைமைகள் மாறி இருக்கின்றன. 1977இல் அடித்த பெரும் புயலினால் கூத்து ஆவணங்கள் (படங்கள், உடுப்புக்கள், அணிகள்) பல அழிந்துவிட்டன. 1980களுக்குப் பிறகு எற்பட்ட பேரினவாத அடக்கு முறையினால் மட்டக்களப்புக் கிராமங்களில் கலை வெளிப்பாடுகள் தேங்கிவிட்டன. அல்லது மக்களும் கலைஞர்களும் இடம்பெயர்ந்து விட்டனர். அத்தோடு, 20 வருடகால சமூக பொருளாதார தொழிநுட்ப மாற்றங்கள் மட்டக்களப்பு மக்களின் சிந்தனைகளைப் பெரிதும் மாற்றியுள்ளன. இந்நிலையில் கூத்தின் இன்றைய நிலையினைப் பின்வருமாறு கூறமுடியும்.

ஒன்று, கிராமங்களில் தாம் முன்னர் பார்த்த கேட்ட அனுபவங்களை வைத்துக் கூத்துப் பழக்கும் அண்ணாவிமாரும் கூத்தாடும் கலைஞர்களும் ஒரு வகை. நான் என் சிறு வயதில் (55வருடங்கட்கு முன்னர்) பார்த்த காலத்திலிருந்து இவை அதிகம் வேறுபட்டவையாக எனக்குத் தெரிகின்றன. ஒரு வகையில் இவை எனக்கு சீரழிவாகத் தெரிகின்றன. சீரழிவு என்று எப்படி நாம் கூறுவது? இன்றைய பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கு எது நிகழ்கிறதோ அதைத்தானே பெரிதாக எடுக்கிறது.

இரண்டு, வித்தியானந்தன் பாணியில் படச்சட்ட மேடையில் கூத்தைச் சுருக்கி மேடையிடும் பாடசாலைக் கூத்துக்களும் அதைப் பழக்கும் நாகரிகத்திற்கு இயைந்து கொடுக்கும் அண்ணாவிமாரும்(?) அவர்தம் கூத்துக்களும்.

மூன்று, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1992இல் கலைப்பீடம் ஆரம்பிக்கப்பட்ட பின் கூத்தினை ஒரு வரண்;முறை பாட நெறியாக்க முயலும் பல்கலைக்கழகக் கூத்தறிஞர்கள். இவர்களை நான் நான்காக் பிரிப்பேன்.

1. கூத்தின் பழைய வடிவினை மீளுருவாக்கம் செய்ய விரும்புவோர்.
2. கூத்தினை ஒரு சமூக அரங்காக்கி அதன் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முனைவோர்.

3. கூத்தினை அடிப்படையாக வைத்து புதிய கலை வடிவங்களை ஆக்க முனைவோர்.

4. இவை அனைத்தையும் மேற்கொள்ளுவோர்.
இந்நான்கு பிரிவினரும் அறிமுறையிலும் செயல்முறையிலும் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அரங்க நிகழ்விடங்கள்


நாடகமொன்று நடிக்கப்படும் எந்தவோர் இடத்தையும் அரங்க நிகழ்விடம் எனப்படும்.

களரி, மேடை,வெளி, ஆடுகளம், அரங்கு எனப் பல பெயர்களால் அரங்க நிகழ்விடம் அழைக்கப்படும்.

பண்டைக்காலத்தில் தீக்குவியற் களம், யாகக் களம், பூசைக் களம் என்பன அரங்க நிகழ்விடங்களாக இருந்தன.

கிரேக்க அரங்கு



பண்டைய கிரேக்கர்களின் கலை ரசனைக்கும், கட்டிட கலைக்கும் சான்றாக விளங்குகிறது அக்ரோபாலிஸ் மலைச் சரிவில் அமைந்துள்ள கலை அரங்கம். கிரேக்கத்தின் அன்றைய எஃபிடாரஸ் (மீஜீவீபீணீuக்ஷீஷீs) நகரில் கட்டப்பட்டுள்ள இந்த டூரிங் டாக்கீஸ் சுமார் 2500 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. கிரேக்கர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து வசந்த காலத்தை கொண்டாட நாடக விழாக்களும், போட்டிகளும் நடத்துவது வழக்கம். டையோனிசஸ் (பீவீஷீஸீஹ்sஷீs) என்ற கிரேக்க கடவுளின் நினைவாக நடத்தப்படும் இந்த விழாக்களை ஏராளமானோர் கண்டுகளிக்க வசதியாக மிகப்பிரம்மாண்டமான கலை அரங்குகள் கட்டப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் எஃபிடாரஸ் நகரில் உள்ள கலை அரங்கம்.

சுமார் 15 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், அரை வட்ட வடிவில் அமைந்துள்ளது. அக்ரோபாலிஸ் மலை அடிவாரத்தில் பாறைகளை குடைந்து இதனை உருவாக்கியிருப்பதால் நடிகர்களின் குரல்கள் மலையில் மோதி எதிரொலிக்கின்றன. இதனால் எந்த மைக் வசதியும் இல்லாமலேயே கடைசி வரிசை ரசிகர்களும் நாடக உரையாடல்களை கேட்டு மகிழ்ந்தனர். இதற்கு வசதியாக ஒரே சமயத்தில் பல கதாபாத்திரங்கள் பேசுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டன.

நாடக நடிகர்கள் அரங்கின் நடுவில் உள்ள ‘ஆர்கெஸ்ட்ரா’ என்று அழைக்கப்பட்ட திறந்தவெளிப் பரப்பில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நாடகங்களுக்கு பின்னணி இசையும் இசைக்கப்பட்டன. இவ்வளவு அட்டகாசமாக நடைபெற்ற இந்த நாடகங்களில் இருந்த ஒரே குறை, இவற்றில் பெண்கள் நடிக்க அனுமதிக்கப்படவில்லை. பெண் வேடங்களையும் ஆண் நடிகர்களே ஏற்று நடிப்பார்கள். அவ்வளவு ஏன், இந்த நாடகங்களைப் பார்க்க கூட பெண்களுக்கு அக்கால கிரேக்கத்தில் அனுமதி இல்லை.

பண்டைய கிரேக்கத்தின் இந்த பிரம்மாண்ட கலை அரங்கில், இப்போதும் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பெண்களும் பங்கேற்கும் நிறைவான நாடகங்கள்.





பாரம்பரிய கலைகள்


ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும்

கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பலகனியாகவும் திகழ்கின்றது. கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு. குறிப்பாக  நாடகக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை. கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே, தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன.

இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான்.


இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கலைகள் உள்ளன. இந்தக்கலைகள் வெளியே தெரியாமல் உள்ளன. மேலும் நாடகம், வீதி நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம், பரதநாட்டியம், இசைச் சிற்பம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.


கிராமியக் கலைகள்:-


ஒயிலாட்டம்

கிராமக் கோவில்களில் ஒயிலாட்டம் விழாக்காலங்களில் ஆடப்படுகிறது. இதிகாச புராண வரலாற்றுக் கதைகளே ஒயிலாட்டத்தில் பாடப்படும், கட்டபொம்மன், மதுரைவீரன், வள்ளி, திருமணம் கதைகள் இடம் பெறும். ஒயிலாட்டம் ஆடுபவர் வெள்ளை ஆடை அணிந்து இருப்பர். காலில் சலங்கையும் கட்டியிருப்பர். கையில் ஆளுக்கொரு கைக்குட்டையைப் பிடித்து இருப்பர். நுனியில் பிடித்து அதை அழகாக வீசியபடியே பாடி ஆடுவர்.


கோலாட்டம்

கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும். இரண்டு கோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும். சமுதாயத்தைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் கோலாட்டப் பாடல்கள் எழுதப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.


கரகாட்டம்

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் கரகம் எடுப்பது தமிழ் நாடெங்கும் உள்ள வழக்கமாகும். மலர்களைக் கொண்டு அழகான ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரக ஆட்டமாகும். இறைவழி பாட்டுடன் தொடர்பு உடையது இந்த கலை பல்வகை வண்ண மலர்களால் போர்த்தப்பட்டு அழகாகச் செய்யப்பட்டிருக்கும். இந்த கரகாட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக ஆடுவது பல அடுக்குகள் கொண்ட கரகத்தைத் தாங்கி ஆடுவது கரகாட்டத்தின் தனிச்சிறப்பு.


காவடி ஆட்டம்

காவடியாட்டம் சமய உணர்விற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் நிகழ்த்தப்படுகிறது. காவடி, தண்டைக் கொண்டு ஆடுவதால் இவ்வாட்டம் காவடியாட்டம் எனப் பெயர் பெற்றது காவடி எடுத்து முருகக் கடவுளை வழிபடும் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெறுவது தமிழர்கள் மரபாகும். காவடியாட்டம் இறைத் தொடர்புடையது ஆதலால் பல கடுமையான நோன்புகளை மேற்கொண்டு காவடி எடுப்பர். கலைத்திறனும் ஆடல் நுட்பமும் இதில் மிகுதியாக இருக்கும்.


கும்மியாட்டம் 


தமிழகமெங்கும் நிகழும் ஆட்டங்களில் கும்மியாட்டம் முக்கிய இடம் வகித்து வருகின்றது. கும்மிக்கென்று தனிமெட்டு உண்டு. ஒருவர் முதலில் பாட, அதனைத் தொடர்ந்து பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடுவர்.


வில்லுப்பாட்டு

தமிழகத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைகளில் மிகச் சிறந்தது வில்லுப்பாட்டு. வில்லுப்பாட்டு பிறப்பிடம் குமரி மாவட்டம் வில்லுப்பாட்டில் குறைந்தது ஐந்து பேர் இருப்பர். வில்லுப்பாட்டில் கதைப் பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். தலைவர் இருவர் கதையைப் பாட்டாகக் கூறிச் செல்லும்போது விளக்க வேண்டிய இடத்தில் விளக்கி, உரைநடையாக கூறுவர். தெய்வங்களின் வரலாறு. தெய்வ நிலை பெற்ற வீரர்களின் வரலாறு. அரசர்களின் வரலாறு இவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறவே வில்லுப்பாட்டு பயன்பட்டது. விழாக்களில் பாடப்பட வில்லுப்பாட்டு, இன்று இலக்கியம், அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரசியல் சமுதாயத் தலைவர்களின் வரலாறுகள் வில்லுப்பாட்டில் இடம் பெறுகின்றன. காந்தி மகான் கதையை மறைந்த கலைவாணர் பாமர மக்களிடையே பரப்பினார்.


தெருக்கூத்து

பிறநாட்டுப்புறக் கலைகளைப் போன்றே இதுவும் தெய்வ வழிப்பாட்டோடு தொடர்பு உடையது. திரௌபதி விழாக்களில், மாரியம்மன் விழாக்களில், சிவன், திருமால், கணேசன், ஆகியோருக்கு எடுக்கப்படும் விழாக்களில் தெரு கூத்தானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.


கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாற்பது கூத்து குழுக்கள் உள்ளன. தெரு கூத்து பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு நிகழ்த்தப்படுகிறது. தெருகூத்தில வரும் கதாபாத்திரங்களின் பண்புகளை வண்ணங்களும் ஒப்பனையும் வெளிப்படுத்தும், துரியோதனனுக்கு சிவப்பும், துச்சாதனுக்கு மஞ்சள், பீமனுக்கு மேகவண்ணமும், கிருஷ்ணனுக்கு பச்சையும், திரௌபதிக்கு இளஞ்சிவப்பும், அர்ச்சுனனுக்கு நீலமும் தீட்டுவர்.


தெருக்கூத்தில் முதன் முதலாக அரங்கினுள் நுழையும் பாத்திரம் கட்டியக்காரன் ஆவான். அவன் கூத்தின் நடுநாயகமான பாத்திரமாகி, அரசனைப் புகழ்பவனாகவும், தூதுவனாகவும், வேலைக்காரனகவும், கோமாளியாகவும், பொது மக்களுள் ஒருவனாகவும், மாறிமாறிப் பாடுவான். கூத்தைத் துவக்கி, காட்சிகளை விளக்கி கதைகளைத் தெரியப்படுத்தி அறிவுரைகளை தூவி, காலநேரச் சூழல்களை முறைப்படுத்தி வாழ்த்துக் கூறுவதுடன் கூத்தை முடிக்கும் பல வேலைகளையும் செய்கின்றவனாக கட்டியக்காரன் தெருக்கூத்தில் இடம் பெறுகிறான். கூத்தின் இறுதிக்கட்டம் பொது வசனம், முடிவுப்பாட்டு, மங்களம் பாடுவதோடு முடியும். தெரு கூத்தானது இவ்வாறு அனைத்து நாட்டுப்புற கலைகளுக்குச் சிறப்பு செய்வதனை காணலாம்.


பொம்மலாட்டம் (பாவைக்கூத்து)

பொம்மைகள் வைத்து நிகழ்த்துவதால் பாவைக் கூத்து எனப்படுகிறது. பொம்மைகள் தோல் பொம்மைகள், மண் பொம்மைகள் என இருவகைப்படும்.

தமிழ் நாட்டில் இக்கலை தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. பாவைகளை மரத்தாலும், தோலாலும் செய்து நூல்களைக் கட்டி ஒரு திரைக்குப் பின்னாலிருந்து ஒருவர் ஆடியசைத்துக் கதைகளை விளங்கச் செய்யும் நாட்டுப்புறக் கலைக்கு ''பாவைக் கூத்து'' எனப்பெயர்.

மரப்பாவைகள் நல்ல ஆடைகள் அணிவிக்கப் பெற்றிருக்கும் தரையில் புரளுமாறு ஆடைகள் பெரிதாக இருக்கும் காண்பதற்கு கால்களே இல்லாமல் மனப்பாவனையில் கால்கள் உள்ளது போல் காட்டப்பெறும். கயிறுகள் இன்றி பொம்மைகள் தாமே. இயங்குவதாக மனத்தோற்றத்தை முழுமையாகத் தோற்றுவிக்கிறபோது அது கலையாகிவிடுகிறது.


சிலம்பாட்டம்

சிலம்பம் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிலம்பம் சிறப்புற்று விளங்கினாலும் குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் விளையாடும் சிலம்பாட்டமே சிறப்பானது. இதில் கம்பிகளைக் கொண்டு ஒலியெழுப்பி விளையாடுவர். இக்கலையைப் பயிற்றுவிக்கும் செயலைக் ''களிரிப்பயிற்று'' என்று கூறுவர். புத்த சமயத்துறவிகள் மூலம் இந்தப் போர்க்கலை žனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்றது என்பர் வரலாற்று ஆசிரியர்கள். இக்கலை சிறந்த மாற்றங்களுடன் ஜப்பான் நாட்டில் கராத்தே என்று அழைக்கப்படுகிறது.


பொய்க்கால் குதிரை

புராணக் கதைகளைப் பொய்க்கால் குதிரை ஆட்டத்தின் மூலம் நடித்துக் காட்டுவதுண்டு தஞ்சையை ஆண்ட மராட்டியர்களால் இக்கலை சிறப்புற்றது. ஆணும், பெண்ணும் பங்கேற்கும் இவ்வாட்டத்தில் ஆண் அரசர் வேடந்தாங்கியும், பெண் அரசி வேடந்தாங்கியும் ஆடுவர்.

கேரளா நாட்டு கதகளி பஞ்சாபி நாட்டுக் கதை ஆகியவற்றின் நடனக் கூறுகள் பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

உறியடி விளையாட்டு

உறியடி என்பது ஒரு கிராமியக் கலையாகக் கருதப்படுகிறது. உறியடி விழா என்பதும் கோவில் சார்ந்த கலையாகக் கருதப்படுகிறது. உறி 10 அல்லது 15 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும். உறியை அடிப்பவர் மூன்று அடி நீளமுள்ள கம்புடன் காத்திருப்பர்.

உடுக்கடிப்பாட்டு

மழையின்றித் தவிக்கும் காலத்தில் பல ஊர்களில் உடுக்கடிப்பாட்டு நடத்தப்படும் இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இக்கலை நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. காத்தவராயன் கதையைப் பாடுவதே பெரு வழக்கமாக உள்ளது.

புலியாட்டம்


தேரோட்டம், சாமி ஊர்வலம் போன்ற திருவிழா நிகழ்ச்சிகளில் இவ்வாட்டம் நிகழ்த்தப்படுகிறது. ஒருவர் புலி போன்ற வேடமிட்டு ஆடுவர். மற்றொருவர் வேட்டைக்காரன் போல் வேடமிட்டு ஆடுவர். இவ்விருவரும் சேர்ந்து ஆடும் ஆட்டந்தான் புலி ஆட்டம் என்பர்.